கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை இன்று காலை 8.30 மணிக்கு ஆரம்பமாகியது. இதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் 2 ஆயிரத்து 268 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சை நடைபெறுகின்றது. இம்முறை பரீட்சையில் 3 இலட்சத்து 21 ஆயிரத்து 469 மாணவர்கள் தோற்றுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் தெரிவித்துள்ளார்.