பங்களாதேஷில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் 25 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. வீதி பாதுகாப்பு தொடர்பில் மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடந்த 7 நாட்களாக தொடர்ந்தும் குறித்த எதிர்ப்பு பேரணியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் கலந்துகொண்டுள்னர். ஆர்ப்பாட்டத்தின் மீது தாக்குதல் நடத்திய தரப்பு தொடர்பில் இதுவரை எந்தவொரு தகவல்களும் வெளியாகவில்லை.