இந்தியாவுக்கும், நேபாளத்திற்குமிடையில் எல்லை மறுசீரமைப்பு வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கபபட்டுள்ளது. 500 கிலோ மீற்றர் தூரமான பகுதியினை மீள் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. எல்லையில் சில பகுதிகளில் அமைக்கப்பட்டிருந்த மத்திய நிலையங்கள் பல சேதங்களுக்குள்ளாகியுள்ளன. காலநிலை மாற்றம் மற்றும் இயற்கை அனர்த்தங்களால் இவை சேதமடைந்துள்ளன. அதற்கமைய இருநாட்டு முப்படையினர் மற்றும் பொலிஸாரை பயன்படுத்தி எல்லை பகுதியை மறுசீரமைக்கும் பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதாக இந்திய மற்றும் நேபாள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.