காடுகளுக்கு தீ வைப்பதை தடுக்கும் வேலைத்திட்டத்திற்கென குறுஞ்செய்தி சேவையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. திட்டம் இன்று முதல் நடைமுறைப்படுத்தப்படுவதாக பதுளை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவி பணிப்பாளர் உதய குமார தெரிவித்துள்ளார். ஊவா மாகாணத்தில் காடுகளுக்கு தீ வைக்கும் பல்வேறு சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அதனை தடுப்பதற்கும், இவ்வாறான செயற்பாடுகள் ஈடுபடும் நபர்களுக்கு எதிரான நடவடிக்கைகள் தொடர்பிலும் மக்களை தெளிவுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொலைத்தொடர்புகள், டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்ணான்டோவின் ஒத்துழைப்பும் இதற்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக உதய குமார தெரிவித்துள்ளார்.