புதையல் அகழ்வில் ஈடுபட்ட இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். குளியாப்பிட்டிய பொலிஸார் மடகும்புரமுல்ல பிரதேசத்தில் முன்னெடுத்த சுற்றிவளைப்பையடுத்தே அவர்கள் கைதாகியுள்ளனர். அவர்களிடமிருந்து அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட பொருட்கள் சிலவும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்களை குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.