முன்னாள் ஜனாதிபதி செயலகத்தின் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட 4 பிரதிவாதிகளுக்கு இம்மாதம் 24ம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு மூன்று நீதிபதிகள் அடங்கிய விஷேட மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள அதேவேளை இவர்களுக்கு எதிராக சட்டமா அதிபரால் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த அரசாங்க காலத்தில் லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்தியதாக இவர்களுக்கெதிராக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.