வீடுகளை நிர்மாணிக்கும் இலக்கை வெற்றி கொண்டு அதற்கான கிண்ணத்தை சுவிகரிப்பதை போன்று எதிர்வரும் தேர்தல்களிலும் கிண்ணததை சுவிகரிக்க போவதாக அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். திருகோணமலை மாவடடத்தில் நிர்மாணிக்கப்பட்ட 2 மாதிரி கிராமங்களை மக்களிடம் கையளித்ததன் பின்னர் இடம்பெற்ற பொது கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்ட தட்சணாபுறம் மாதிரி கிராமத்தில் 25 வீடுகள் அமைந்துள்ளன. அனைவருக்கும் நிழல் மீள் எழுச்சி பெறும் மாதிரி கி7ராம திட்டத்தின் கீழ் மக்களிடம் கையளிக்கப்பட்ட 99 வது மாதிரி கிராமம் இதுவாகும். கைலாயபுறம் மாதிரி கிராமத்தில் 22 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. நீர் , மின்சாரம் உள்ளிட்ட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளும் அங்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்கிராமங்களை நிர்மாணிப்’பதற்கென 475 இலட்சம் ரூபா செலவிடப்பட்டுள்ளன. 2 அ ரசியல் குழுக்கள் தொடர்பாக அமைச்சர் தெளிவுப்படுத்தினார்.
இன்று அரசியலில் ஒரு பகுதியினர் அரசியல் மந்திரம் ஓதுகின்றனர். யார் ஜனாதிபதி, யார் பிரதமர், யார் ஜனாதிபதி வேட்பாளர், யார் போட்டியிடுவார்? யார் விரைவில் அலரி மாளிகைக்கு செல்பவர் என்று அவர்கள், மந்திர ஆலோசனை நடத்துகின்றனர். நாங்கள் மறுபுறம் இருந்து எத்தனை மாதிரி கிராமங்களை அமைப்போம், இவ்வாண்டு எத்தனை வீடுகளை அமைப்போம், 2020 ஆம் ஆண்டு இலக்குகள் என்ன? 2012 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2022 ஆம் ஆண்டு எவ்வளவு வீடுகள் நிர்மாணிக்கப்பட வேண்டுமென்று நாம் சிந்தித்து வருகின்றோம். மாற்றம் என்னவென பலரும் எம்மிடம் கேட்கின்றனர். இதுதான் மாற்றம் அமைச்சர் சஜித் தெரிவித்தார்.
எதிர்கட்சி தலைவர் இரா சம்பந்தன்ஸ்ரீ உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.