பலாங்கொடை சமனலவத்த பகுதியில் உள்ள காட்டில் காணாமல் போன சிறுவனை தேடும் நடவடிக்கைகள் தற்காலிமாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடந்த வெள்ளிக்கிழமை பகல் வேளையில் இருந்து இந்த சிறுவன் காணாமல் போயுள்ளார். விறகு வெட்டுவதற்காக அருகில் உள்ள காட்டுக்கு சென்ற தந்தையை தேடி சென்ற சிறுவன் மீண்டும் விடு திரும்பவில்லை. பத்து வயதுடைய சஹன் குமார தர்மசிறி எனும் இந்த சிறுவன் இம்முறை ஐந்தாம் தர புலமை பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்தார். சிறுவன் வசித்து வந்த வீட்டுக்கு 500 மீட்டர் தொலைவில் சிறுத்தை ஒன்றின் தாக்குதலில் உயிரிழந்த மரையொன்றின் சடலம் கண்டுஎடுக்கப்பட்டதாக பொலிசார் தெரிவிக்கின்றனர். இப்பகுதிக்கு தொடர்ந்தும் சிறுத்தைகள் வருவதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினரும், பொலிசாரும் பிரதேசவாசிகளும் சேர்ந்து சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்ட போதிலும் சிறுவன் தொடர்பான எந்தவித தகவல்களும் இதுவரை கிடைக்கவில்லை.