இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இன்று அதிகாலை இந்திய மீனவர்கள் 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.கைது செய்யப்பட்ட மீனவர்கள் யாழ் மீன்பிடி ஆய்வாளர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு மல்லாகம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.2 இயந்திரங்களில் வந்த அவர்கள் காங்கேசன்துறை கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளனர்.இவர்களிடம் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.