சட்டவிரோதமாக வெளிநாட்டு நாணயதாள்களை சிங்கபூருக்கு எடுத்துச்செல்ல முயற்சித்த அந்நாட்டு பொறியியலாளரொருவர் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்ட அவர் 43 வயதுடைய சிங்கப்பூர் பிரஜையென அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரிடமிருந்து ஒரு கோடியே 53 இலட்சத்து 4 ஆயிரத்து 85 ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.