21 வது நூற்றாண்டின் நீர்ப்பாசன அதிசயமான மொரகஹகந்த , களுகங்கை மாபெரும் நீர்த்தேக்க திட்டத்தின் மூலம் களு கங்கையில் நீர் நிரப்பும் வைபவம் மற்றும் மொரகஹகந்த களுகங்கை சுரங்க வழி நீர்ப்பாதை நிர்மாணிக்கும் திட்டம் மிகவும் எழுச்சியுடன் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் லக்கல களுகங்கை அணைக்கருகில் இடம்பெற்றது.
மாத்தளை மாவட்டத்திலுள்ள தும்பர , மெட்டியாவத்தை, நக்கல்ஸ் மலை பகுதியிலுள்ள களுபஹன பகுதியில் களுகங்கை ஊற்றெடுக்கின்றது. களுகங்கைக்கு குறுக்காக லக்கல பல்லேகம பகுதியில் களுகங்கை மாபெரும் நீர்த்தேக்கம் நிர்மாணிக்கப்படுகின்றது. 10 இலட்சத்து 248 கனமீட்டர் நீரை கொள்ளளவாக கொள்ளக்கூடிய விதத்தில் இந்நீர்த்தேக்கம் அமைக்கப்படுகின்றது. அதாவது 2 இலட்சத்து 880 அடி ஏக்கரில் இந்நீர்த்தேக்கம் அமைக்கப்படுகின்றது. இந்நீர்த்தேக்கத்தின் பிரதான அணையின் நீளம் 618 மீட்டர் என்பதுடன் உயரம் 68 மீட்டராகும். நீர்த்தேக்கத்தின் துணை அணைக்கட்டு வலது பக்கத்தில் 28 மீட்டர் நீளத்தை கொண்டதாக அமைக்கப்படுகின்றது. களுகங்கையின் தாழ் நிலப்பகுதியில் குடியேற்றப்பட்ட 3 ஆயிரம் குடும்பங்களுக்காக களுகங்கை நீர் விநியோகிக்கப்படவுள்ளது. பழைய துருசிலிருந்து நீர் கொண்டு செல்லப்பட்டு 2 ஆயிரம் ஏக்கர் காணியில் பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்டது. இதற்கு நீர் பாய்ச்சப்பட்டதன் பின்னர் மேலதிக நீரை மொரகஹகந்த நீர்த்தேக்கத்திற்கு கொண்டு செல்வதே பிரதான நோக்கமாகும். 6 இலட்சத்து 60 ஆயிரம் ஏக்கர் மாபெரும் நீர்த்தேக்க திட்;டத்திற்கு 23 ஆயிரம் கோடி ரூபா முதலீடு செய்யப்படவுள்ளது. ஜனாதிபதி மைத்ரிபாலசிறிசேனவின் 23 வருட கனவை நனவாக்கும் சந்தர்ப்பத்தில் இந்த மாபெரும் நீர்ப்பாசன அதிசயத்தில் மொரகஹகந்த அணையின் ஒரு புறத்தில் கருங்கல்லினால் உருவாக்கப்பட்ட 27 அடி உயரமான அவுக்கன சிலையின் மாதிரி சிலையொன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. சமய வழிபாடுகளுக்கு மத்தியில் இவ்வைபவம் இடம்பெற்றது. சங்கைக்குரிய அலியாவலே விபுலசார தேரர்pடம் சம்பிரதாயபூர்வமாக இச்சிலை ஒப்படைக்கப்பட்டது. அத்துடன் ஜனாதிபதி இச்சிலைக்குமுதலில் மலர் தூவி வணக்கம் செலுத்தினார்.
மகாவெலி திட்டத்தின் பின்னர் இத்திட்டத்தின் மூலம் தேசிய மின்சார கட்டமைப்புக்கு 25 மெகாவோட் மின்சாரத்தை இணைக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வைபவம் இன்றுஇடம்பெற்றது.
தெற்காசியாவின் மிக நீளமான சுரங்க வாய்;க்காலான மேல் எலஹர சுரங்க வாய்க்காலையும் ஜனாதிபதி பார்வையி;ட்டார். 96 கிலோ மீட்டர் நீளமான இவ்வாய்க்காலை நிர்மாணிப்பதற்காக 6 ஆயிரத்து 700 கோடி ரூபாசெலவிடப்படவுள்ளது. இதன் எஞ்சிய நிர்மாண பணிகள் ஜனாதிபதியினால் இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த வாய்க்கால் மூலம் களுகங்கையில் நிரம்பும் நீர்; விநாடிக்கு 35 கனமீட்டர் நீர் மொரஹகந்த நீர்த்தேக்கத்திற்குஅனுப்பப்படும். இச்சுரங்க பாதையின் அகலம் 25 அடி ஆகும். 6 மாதங்களில்இ ப்பணிகள் நிறைவு செய்யப்படவுள்ளன. அனைத்து நிர்மாண பணிகளும் சுற்றாடலை பாதுகாக்கும் வகையில் இடம்பெறுவது விசேட அம்சமாகும்;. மொரகஹகந்த களுகங்கை திட்டத்தின் மூலம் மஹகந்தராவ , அம்பன்கங்க, யோதவாவி ஊடாக மின்னேரியா மற்றும் கிரித்தலை, கடுவுல்ல கந்தளாய் வரை கொண்டு செல்லப்படும் நீர் மேலும் அதிகரிக்கவுள்ளது.
மொரகஹகந்த நீர்த்தேக்கத்தை குலசிங்க நீர்த்தேக்கம் எனும் பெயர் மாற்றம் செய்யும் வைபவமும் இங்கு இடம்பெற்றது. மொரகஹகந்த களுகங்கை திட்டம் விவசாய கைத்தொழில், குடிநீர் தேவை, மீன் பிடி, சுற்றுலா, மின்சாரம், ஆகியவற்றின் வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை செலுத்தும். இதேவேளை மஹாவெலி மெஹவர எனும் பத்திரிகையும் ஜனாதிபதிக்கு இந்நிகழ்வில் வைத்து வழங்கப்பட்டது.