இலங்கைக்காக முன்நின்றமையினால் பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் இயன் பேஸ்லிக்கு 30 நாட்களுக்கு பாராளுமன்றம் இடைநிறுத்தப்பட்டிருப்பதாக ஒருங்கிணைந்த எதிர்கட்சி சார்பிலான ஊடகங்கள் வெளியிடும் செய்திகள் முற்றிலும் உண்மைக்கு புறம்பானவையென அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் ஒழுக்க நெறிகளை மீறி இலங்கையில் அப்போதிருந்த நிர்வாகத்திடம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் கீழ் குற்றவாளியாக கருதப்பட்டதனால் குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு வருகை தந்து, இந்த நாட்டு அரசாங்கத்தின் செலவீனத்தில் அவர் செயல்பட்டுள்ளமை அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும். இலங்கைக்கு வருகை தந்து, அவருடைய சொந்த விடயங்களுக்காக இந்த நாட்டு அரசாங்கத்தின் செலவில் செயல்பட்டதை அந்த நாட்டு பாராளுமன்றத்திற்கு அறிவிக்காமையே அவருக்கு எதிரான குற்றச்சாட்டாகும். நாட்டை தவறான வழியில் இட்டுச் செல்லும் வகையில் இந்த பத்திரிகைகளில் செய்திகள் வெளியிட்;டுள்ளன. இது பிரிட்டிஷ ராஜதந்திர உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என மேலும் குறிப்பிட்டார்.
இயன்பேஸ்லி தனது குடும்பத்துடன் பல தடவைகள் விடுமுறையை கழிப்பதற்காக பிரிட்டிஷ் பாராளுமன்ற ஒழுக்க நெறிகளை மீறி அப்போதைய ஆட்சியாளர்களின் செலவில் இலங்கைக்கு வருகை தந்துள்ளார். பாராளுமன்ற சட்டங்களை மீறியமையினால் அவருக்கு தனது பதவியிலிருந்து விலகுமாறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டுள்ளதாகவும் பிபிசி சிங்கள செய்தி அறிவிக்கின்றது. பாராளுமன்ற உறுப்பினர் பேஸ்லி மீண்டும் உறுப்புரிமையை பெற்றுக் கொள்வதாகவிருந்தால் இடைக்கால தேர்தலில் போட்டியிட வேண்டுமென பிபிசி தெரிவித்துள்ளது. பிரித்தானியாவின் டெய்வி டெலிகிராப் பத்திரிகை கடந்தாண்டு செப்டம்பர் மாதம் முதல் முதலாக இந்த செய்தியை வெளியிட்டது. தனது குடும்பத்துடன் 2013 ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தின் செலவில் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் தொடர்பான தகவல்களை வழங்க தவறியமையினால் 30 நாள் பாராளுமன்ற தடை அவருக்கு விதிக்கப்பட்டதாக பிபிசி தெரிவித்துள்ளது. இயன் பேஸ்லியின் சட்டத்தரணி கருத்து வெளியிடுகையில் தனதுகட்சிக்காரருக்கு இலங்கை வழங்கிய அனுசரணையை தெரிவிக்க முடியாது போனதையிட்டு மன்னிப்பு கோருவதாகதெரிவித்தார். பிரிட்டிஷ் பாராளுமன்றத்தின்விசேட குழுவொன்று சமர்ப்பித்த அறிக்கைக்கு ஏற்ப இயன் பேஸ்லி பல சட்டங்களை மீறியுள்ளார். அந்த அறிக்கையின் படி இயன்பேஸ்லி பிரிட்டிஷ் பிரதமருக்கு 2014 ஆம் ஆண்டு மார்ச் 19 ஆம் திகதி கடிதம் ஒன்றை அனுப்பி வைத்ததுடன் இலங்கை தொடர்பாக ஐநா பிரேரணைக்கு ஆதரவு வழங்க வேண்டாமென்றும் கோரியிருந்தார். எனினும் அதற்கு மு:ன்னரான 12 மாதங்களுக்குள் இலங்கை அரசாங்கத்தினால் தனிப்பட்ட உதவிகள் செய்யப்பட்டுள்ளதுடன் அனுசரணையும் வழங்கப்பட்டுள்ளதாக குறித்த குழு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பிரத்தியேக சலுகைகள் மற்றும் அனுசரணை தொடர்பாக குறிப்பிடுவதற்கு தவறியமையினால் பாராளுமன்றத்தின் சட்டங்களை மீ’றியுள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை ஆராய்ந்ததன் பின்னர் எதிர்வரும் செப்டம்பர் 4 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்கு பாராளுமன்றத்தை இடை நிறுத்த குழு தீர்மானித்துள்ளது. ராஜதந்திர சட்டங்களை கூட கவனததில் கொள்ளாத ராஜபக்ஷக்கள் வழமையான இலஞ்சம் நிறைந்த அரசியல் நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளமை இச்சம்பவத்தின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது. இது போன்ற ஊழல் மோசடிமிக்க செயல்பாடுகளினால் இலங்கை சர்வதேச ரீதியில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற லஞ்சம் நிறைந்த அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து பிரிட்டனை போன்று சிறப்பான பாராளுமன்ற சம்பிரதாயம் ஒன்றை இலங்கையிலும் ஏற்படுத்த வேண்டியதன் மு:க்கியத்தும்இ தன் ஊடாக வலியுறுத்தப்பட்டுள்ளது