உரிய சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளாமை மற்றும் தாமதமாக சிகிச்சைகளை பெறுவதால் புற்றுநோயாளர்களின் உயிரிழப்பு வீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் ஆயிரத்து 290 புற்றுநோயளர்களை பயன்படுத்தி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்றுக்கொள்ளப்பட்ட சிகிச்சை முறைகளை நிராகரித்தல் அல்லது தாமதமாக சிகிச்சைபெறும் நோயாளர்கள் உயிர்வாழும் சந்தர்ப்பம் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாக அமெரிக்க வைத்திய ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இந்நிலையில் புற்றுநோயளர்கள் சத்திரசிகிச்சை அல்லது இரசாயன முறையிலான சிகிச்சைகளை உரியமுறையில் பின்பற்றுவது அவசியமென அமெரிக்க விஞ்ஞானிகள் அறிவுறுத்தியுள்ளனர்.