சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கென புதிய படையணியொன்று அமைக்கப்படுமென மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. இதற்கென சிவில் பாதுகாப்பு அதிகாரிகளின் ஒத்துழைப்பை பெற்றுக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டத்தில் 5 ஆயிரம் பாதுகாப்பு அதிகாரிகளை கொண்ட சகல அதிகாரங்களையுமுடைய சுற்றுச்சூழல் இராணுவமொன்றை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. நாடெங்கிலுமுள்ள 29 படையணிகளினூடாக குறித்த அதிகாரிகள் தெரிவுசெய்யப்படவுள்ளனர். இதற்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியும் பெறப்படவுள்ளது. பின்னர் குறித்த அதிகாரிகளுக்கு மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதேச செயலாளர் அலுவலகங்களினூடாக முறையான பயிற்சிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.