கலேவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலகிரியாகம பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளொன்று, லொறியுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. உயிரிழந்தவர்கள் அம்பாறை சம்மாந்துறை பிரதேசத்தை சேர்ந்தவர்களாகும். பலத்த காயமடைந்த அவர்கள் தம்புள்ளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.