இலங்கைக்கு கடல்மார்க்கமாக கஞ்சா போதைப்பொருளை எடுத்துவர முயற்சித்த மூவர் இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்து 304 கிலோகிராம் கஞ்சா போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவற்றின் பெறுமதி இந்திய ரூபாவில் 50 இலட்சமென மதிப்பிடப்பட்டுள்ளது.