பேராதெனிய பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தை காலவரையறையின்றி மூட பல்கலைக்கழக நிர்வாகத்தினர் தீர்மானித்துள்ளனர். மாணவர்கள் சிலர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளமையே இதற்கு காரணமாகும். விரிவுரை வகுப்புக்களின் போது நூற்றுக்கு 80 வீத வரவு இல்லாத மாணவர்களுக்கு பரீட்சை எழுத வாய்ப்பு வழங்குமாறு தெரிவித்தே குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தை மாணவர்கள் முன்னெடுக்கின்றனர். குறித்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளவர்களில் நான்கு பேர் எந்தவொரு விரிவுரை வகுப்புக்களுக்கும் வருகை தராதவர்களென பேராதெனிய பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் உபுல் திஸாநாயக்க தெரிவித்துள்ளார். அதற்கமைய பொறியியல் பீட மாணவர்கள் பல்கலைக்கழகத்திலிருந்து வெளியேறுவதற்கு பிற்பகல் இரண்டு மணி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.