ஹவுங்கல பொலிஸ் நிலையத்தின் அருகிலுள்ள கடலில் இனந்தெரியாத சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது.
பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை தொடர்ந்து இச்சடலம் பலப்பிட்டிய ஆதார வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இச்சடலம் அடையாளம் காண முடியாத வகையில் அழுகியுள்ளதுடன் இது வெளிநாட்டு பிரஜையொருவரின் சடலமாக இருக்கலாமென கருதப்படுகின்றது. இதுவரை யாரும் இந்த சடலத்தை அடையாளம் காண முன்வரவில்லை. ஹவுங்கல பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர