போதைப்பொருள் விநியோக வலயத்தில் கைவைக்காமல் நாட்டில் போதைப்பொருள் பாவனை அதிகரிப்பதை நிறுத்த முடியாதென பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து போதைப்பொருள் வர்த்தக நடவடிக்கைகளை முடக்க தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2002ம் ஆண்டளவில் ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களை முன்னோக்கி கொண்டுசெல்வதற்கென சட்டதிட்டங்களை முறையாக செயற்படுத்தாமை, போதைப்பொருள் ஒழிப்புக்கான வேலைத்திட்டங்கள் இன்மை மற்றும் அரசியல் தலையீடு காரணமாக போதைப்பொருள் பாவனை கிராமங்களிலும் வியாபித்துள்ளதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இப்பாகமுவ பகுதியில் புதிய மாநாட்டு மண்டபமொன்றை திறந்துவைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/HVvedv-nbiw”]