பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெம்பியன் தோட்டப்பகுதியில் சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொகவந்தலாவ பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கைதுசெய்யப்பட்டவர்களிடமிருந்து அகழ்வுக்காக பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் சில மீட்கப்பட்டுள்ளன. சந்தேக நபர்கள் பொகவந்தலாவ பகுதியை சேர்ந்தவர்களாகும். அவர்களை விசாரணைகளின் பின்னர் ஹட்டன் நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.