தம்புள்ளை எஹெலேபொலவத்த பிரதேசத்திலுள்ள தும்பு ஆலையில் தீ பரவியுள்ளது. பொலிஸ் அதிகாரிகள், தம்புள்ளை தீயணைப்பு பிரிவு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் தீ கட்டுப்படுத்தியுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. தீயினால் வெளியான புகையினால் தொழிற்சாலையில் பணிருந்த மூவர் மூச்சுத்திணறலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் தம்புள்ளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.