கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களில் நாளை நீர்வெட்டு
Related Articles
கம்பஹா மாவட்டத்தின் சில பிரதேசங்களுக்கு நாளை நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. காலை 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான 16 மணி நேர நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அத்தியசிய திருத்தப் பணி காரணமாகவே நீர்வெட்டு அமுலில் இருக்குமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
களனி, வத்தளை, பியகம. மஹர, தொம்பே, ஜா-எல மற்றும் கம்பஹா பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களிலும் பேலியகொட, கட்டுநாயக்க மற்றும் சீதுவ ஆகிய நகர சபைக்குட்பட்ட பிரதேசங்களிலும் நீர்வெட்டு அமுலில் இருக்குமென தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை மேலும் தெரிவித்துள்ளது
Let me tell You a sad story ! There are no comments yet, but You can be first one to comment this article.
Write a comment