நான்கு கோடியே 80 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டு நாணத்தாள்களுடன் மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அவர்களில் இந்திய பிரஜையொருவரும் அடங்குவதாக எமது விமான நிலைய செய்தியாளர் தெரிவித்தார். ஏனைய இருவரும் கொழும்பு மற்றும் குளியாப்பிட்டிய பிரதேசங்களை சேர்ந்தவர்களாகும். சந்தேக நபர்கள் குறித்த பணத்தொகையை சிங்கப்பூருக்கு எடுத்துச்செல்ல முற்பட்டுள்ளமை விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. இந்நிலையில் சந்தேக நபர்கள் தடுத்து வைத்து விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.