நடைபெற்று வரும் இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாள் இன்றாகும்.நாணய சுழற்சியில் வென்ற இலங்கை தனது முதலாவது இன்னிங்சில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 287 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.திமுத் கருணாரத்ன 158 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக்கொண்டார்.பந்துவீச்சில் ரபடா 4 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.அதன் பின்னர் நேற்று தனது முதலாவது இன்னிங்சை ஆரம்பித்த தென்னாபிரிக்கா அணி இன்று சகல விக்கட்டுக்களையும் இழந்து 126 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.பாப் டூ பிளஸிஸ் 49 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.பந்துவீச்சில் தில்ருவான் பெரேரா 4 விக்கட்டுக்களை வீழ்த்தியதோடு அணித்தலைவர் சுரங்க லக்மால் 3 விக்கட்டுக்களை வீழ்த்தினார்.இலங்கையணியின் துல்லியமான பந்துவீச்சுக்கு தென்னாபிரிக்காவினால் துடுப்பெடுத்hடுவது கஷ்டமாகவே இருந்தது.இலங்கையணி தனது இரண்டாவது இன்னிங்சில் தொடர்ந்தும் துடுப்பெடுத்தாடி வருகின்றது.