வரலாற்று சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்தின் வருடாந்த உற்சவம் இன்று ஆரம்பமாகிறது. எதிர்வரும் 27 ம் திகதி வரை பூஜை வழிபாடுகள் இடம்பெறவுள்ளது. இம்முறை வழிபாடுகள் 15 தினங்களுக்கு நடைபெறவுள்ளதுடன் இதுவரை சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட யாத்திரிகர்கள் கதிர்காமத்தை வந்தடைந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்நிலையில் விழா காலத்தின் போது குப்பை கூழங்களை முறையாக அகற்றுவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் ஜெய்க்கா நிறுவனத்தின் உதவியுடன் மத்திய சுற்றாடல் அதிகார சபை திட்டத்தை முன்னெடுக்கவுள்ளது. திட்டத்திற்கென முன்றைரை கோடி ரூபா செலவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.