காட்டு யானை தாக்கியதில் அம்பன்பொல – பத்தினிகம பகுதியில் ஒருவர் பலியாகியுள்ளார். நேற்று இரவு சம்பவம் இடம்பெற்றுள்ளது. பத்தினிகம பகுதியை சேர்ந்த 34 வயதுடைய நபரொருவரே சம்பவத்தில் உயிரிழந்துள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளார். பிரேத பரிசோதனை இன்று இடம்பெறும் நிலையில், அம்பன்பொல பொலிஸார் மேலதி விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.