கிராம சக்தி வேலைத்திட்டத்தின் மத்திய மாகாணத்திற்கான செயற்பாட்டு குழு இன்று பிற்பகல் கூடுகிறது. ஜனாதிபதி மைதிரிபால சிறிசேன தலைமையில் கூட்டம் இடம்பெறவுள்ளது. அரசியல் அதிகார சபை மற்றும் அரச அதிகாரிகள் குறித்த கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் முதற்கட்ட அவதானம் செலுத்தப்பட்டு, தீர்வுகளை பெற்றுக்கொடுக்க எதிர்ப்பார்க்கப்பட்டுள்ளது. வாழ்க்கைமுறையை அபிவிருத்தி செய்வது தொடர்பில் கிராமசக்தி திட்டத்தினூடாக பல்வேறு வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.