போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாவனையுடன் சம்பந்தப்பட்ட குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரணதண்டனை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நேற்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது என்று அமைச்சர் காமினி ஜயவிக்ரம பெரேரா தெரிவித்தார்.
நோன்மதி தினங்களில் வகுப்புக்கள் நடத்தப்படுவதையும் ஞாயிறு தினங்களில் பிற்பகல் 2.00 மணி வரை வகுப்புக்கள் நடத்தப்படுவதையும் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுப்பதாக அவர் புத்தசாசன அமைச்சில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தார்.
இது குறித்து ஆளுநர்கள் மற்றும் அமைச்சின் அதிகாரிகளுடன் கலந்துரையாட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. விஹாரை மற்றும் ஆலயங்கள் சட்ட திருத்தத்திற்கும் பிக்குகள் கருத்தாடல் சட்டத்திற்கும் நாயக்க தேரர்களின் அனுமதி கிடைக்கப் பெற்றுள்ளது. இது தொடர்பான சட்டமூலம் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுமென்று அமைச்சர் தெரிவித்தார். பின்தங்கிய பிரதேசங்களில் உள்ள குறைந்த வசதிகளைக் கொண்ட விஹாரைகள் அபிவிருத்தி செய்யப்படும். புத்தர் சிலைகளுக்கு காப்புறுதி ஒன்றை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுப்பதாக அமைச்சர் தெரிவித்தார். புதிதாக விஹாரைகளை அமைக்க அனுமதியளிக்கப்படுவதில்லை என்ற சிலரின் குற்றச்சாட்டுக்களை அமைச்சர் நிராகரித்துள்ளார்.