பாடசாலை மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்து இராணுவ வீரர் ஒருவர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இன்று பிற்பகல் 4 மணியளவில் பூவரசன்குளம் ஊடாக மெனிக்பாம் சென்ற இ.போ.ச பஸ்ஸில் பாடசாலைச்சீருடையுடன் மாணவி ஒருவர் பயணம் செய்துள்ளார்.இதன்போதே குறித்த பாடசாலை மாணவியின் அருகில் சென்று தொலைபேசி இலக்கத்தை கேட்டு அந்த மாணவிக்கு தொல்லை கொடுத்துள்ளார்.இதனை அவதானித்த பயணி ஒருவர் உடனே குருமன்காட்டிலுள்ள பொலிஸ் காவல் அரணில் பஸ்ஸை நிறுத்துமாறு சாரதியிடம் கேட்டுள்ளார்.பஸ் நிறுத்தப்பட்டதும் குறித்த இராணுவ வீரர் தப்பி ஓடியுள்ளார்.உடனே பஸ் நடாத்துனர் ஓடிச்சென்று அந்த இராணுவ வீரரை பிடித்துள்ளனர்.பின்னர் அவரை வவுனியா பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.அங்கு பொது மக்கள் ஒன்று கூடியதுடன் சற்று பதற்ற நிலையும் காணப்பட்டது.மாணவிக்கு தொல்லை கொடுத்த இராணுவ வீரரை கைது செய்யுமாறு பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தை சுற்றி வளைத்தனர்.தலைமை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குறித்த இராணுவ வீரரைக் கைது செய்துள்ளதாகவும் பொதுமக்களுக்கு தெரிவித்துள்ளார்.குறித்த பஸ் பொலிஸ் நிலையத்தில் விசாரணைகளுக்காக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளது.இராணுவ வீரரிடம் தொடர்ந்தும் விசாரணைகள்; இடம்பெற்று வருகின்றது.