பிரபல பாடகி பிரியாணி ஜயசிங்கவின் கொலை தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை அருக்கொட பகுதியிலுள்ள தமது வீட்டில் பிரியாணி ஜயசிங்க கொலை செய்யப்பட்டார். குடும்ப தகராறு காரணமாக அவரது கணவர் இக்கொலையை செய்திருக்கலாமென தெரிவிக்கப்படுகின்றது. இவர் பல்வேறு பாடல்களை பாடி இலங்கை ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தார்.