5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் எதிர்வரும் இரு வாரங்களுக்குள் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கப்படுமென பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். பரீட்சை அடுத்த மாதம் 5ம் திகதி இடம்பெறவுள்ளது. அதற்கான ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார்.