உலக மதிப்புள்ள பழைய மற்றும் நவீன முறைகளை பின்பற்றுவதன் ஊடாக நிலையான நகர உருவாக்க சவால்களுக்கு முகங்கொடுக்க முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதற்கு அனைத்து மக்களையும் ஒன்றிணைக்க வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார். சிங்கபூரில் இன்று ஆரம்பமான சர்வதேச நகர மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதான உரை நிகழ்த்தும் போதே பிரதமர் இதனை தெரிவித்தார்.
ஆறாவது சர்வதேச நகர மாநாடு சிங்கபூரில் இன்று ஆரம்பமாகியது. 135 நாடுகளின் பிரதிநிதிகள் இதில் கலந்து கொள்கின்றனர். இதற்கு இணைவாக சர்வதேச நீர்வாரம் சுத்தமான சுற்றாடல் மாநாடும் ஆரம்பமாகியது. மூன்று மாநாடுகளின் அங்குரார்ப்பண நிகழ்வில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பிரதான உரை நிகழ்த்தினார். எதிர்கால வனஜீவராசிகள் மற்றும் நிலையான நகர மானுட செயற்பாடுகள் ஊடாக எழும் சவால்கள் எனும் தொனிப்பொருளில் பிரதமர் உரையாற்றினார்.
இங்கு உரை நிகழ்த்திய பிரதமர்,
சிங்கபூரில் நடைபெறும் சர்வதேச நகர மாநாட்டுக்கு இலங்கை பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுத்தமை தொடர்பாக சிங்கபூர் அரசாங்கத்திற்கு நன்றி தெரிவிக்கிறேன். உரிய முகாமைத்துவத்துடன் நகரங்கள் கட்டியெழுப்பப்படுவதற்கு சிங்கபூர் சிறந்த முன் உதாரணமாகும். நாம் இன்று மனித செயற்பாடுகளுடன் கட்டியெழுப்பப்பட்ட ஒரு யுகத்தில் வாழ்கிறோம். இதனால் மக்கள் பெருமளவில் நகரங்களை நோக்கி நகர்கின்றனர். சில நாடுகளில் நகர திட்டமிடல்கள் இன்றி இவை முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனால் மக்களுக்கு வாழக்கூடிய சுற்றுசூழலுடன் கூடிய நகரங்கள் உருவாக்கப்படுவது காலத்தின் தேவையாகும். தெற்காசிய நகரங்களுள் கொழும்பு நகருக்கு அதி உயர் இடம் கிடைக்கின்றது. 231 நகரங்களுள் அது 137வது இடத்தில் உள்ளது. ஆசியாவின் 50 நகரங்கள் இந்த குறிக்காட்டியின் கீழ் உள்ள ஐம்பது நகரங்களுள் அடங்குகின்றன. உலக பொருளாதாரத்துடன் தொடர்பு கொள்ளும் அடிப்படை அங்கமாக நகர் பகுதிகளில் ஏற்பட்டுள்ள பாரிய உட்கட்டமைப்பு வசதிகள் அடங்குகின்றன. இலங்கையின் அமைவிடம் மற்றும் அதன் பயன்களை அடிப்படையாக கொண்டு பிராந்திய ரீதியில் கூடுதலான பொருளாதார வளர்ச்சியை பெற்று கொள்வதே இலக்காகும். எமது நகரங்களுக்கு தனிமையாக முன்னேறிச்செல்ல முடியாது. நவீன துரித தொடர்புகள், மானுட பாதுகாப்பு, நலன்புரி விடயங்கள் ஆகியவற்றை உயர் நிலைக்கு கொண்டுவந்து நிலையான நகர அபிவிருத்திக்கான பயணத்தை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும் என்பது குறித்து கண்டறிய வேண்டும் என குறிப்பிட்டார்.
பேராசிரியர் மைத்ரி விக்கிரமசிங்க, அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், சஜித் பிரேமதாச, மலிக் சமரவிக்ரம, பிரதியமைச்சர் அனோமா கமகே ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் உரையை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாநாட்டின் தலைவர் பேராசிரியர் டொமிக்கோ இதனை வழிநடத்தியதுடன், இங்கு கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பிரதமர் பதில் அளித்தார்.
இதேநேரம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான இலங்கை தூதுகுழுவிற்கு சிங்கபூர் பிரதமர் லிசின்லூங் பகல் போசன விருந்தளித்து கௌரவித்தார். இலங்கை சிங்கபூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்ததத்துடன், இலங்கையில் முதலீடுகளை அதிகரிக்க சிங்கபூர் நடவடிக்கை எடுத்துள்ளதாக சிங்கபூர் பிரதமர் தெரிவித்தார். இந்த ஒப்பந்தத்தின் ஊடாக தொழில்நுட்ப அறிவு, வேலைவாய்ப்புக்கள் இலங்கையர்களுக்கு கிடைக்கும் என அறிவிக்கப்படுகின்றது. பொருளாதார, சமூக விடயங்களில் நெருக்கமாக செயற்படுவதன் ஊடாக சாதக நிலைகளை உருவாக்கிக்கொள்ள முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.