ரஷ்யாவில் நடைபெறும் 21 வது பீபா உலக கிண்ண கால்பந்தாட்ட போட்டியின் அரையிறுதி போட்டிகள் நாளை ஆரம்பமாகின்றன.
அரையிறுதிக்கு பிரான்ஸ், பெல்ஜியம், குரேசியா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன. நாளை முதலாவது அரையிறுதி போட்டி இடம்பெறவுள்ளது. இதில் பிரான்ஸ், பெல்ஜியம் ஆகிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நாளை மறுதினம் நடைபெறும் மற்றொரு அரையிறுதி போட்டியில் இங்கிலாந்தும் குரேசியாவும் மோதவுள்ளன. 1998 இல் உலக கிண்ணத்தை கைப்பற்றிய பிரான்ஸ் தொடர்ந்து 6 வது தடவையாக அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது. கடந்த உலக கிண்ண போட்டியில் இவ்வணி காலிறுதி சுற்றில் விளையாடியது. பெல்ஜியம் அணியை பொருத்தவரை 13 வது தடவையாக உலக கிண்ண போட்டியில் பங்கேற்கின்றது. 1986 ஆம் ஆண்டுக்கு பின்னர் 2 வதுமுறையாக அரையிறுதி சுற்றுக்குள் பெல்ஜியம் அணி நுழைந்துள்ளது. இவ்வணியும் கடந்த உலக கிண்ண போட்டியில் காலிறுதி சுற்றில் விளையாடியது. இங்கிலாந்து அணி 15 வது முறையாக உலக கிண்ணபோட்டியில் விளையாடும் அதேநேரம் 1966 இல் உலக கிண்ணத்தை கைப்பற்றியது. 3 வது முறையாக இம்முறை அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. 1996 ஆம் ஆண்டுக்கு பின்ன்ர் இவ்வணி அரையிறுதி போட்டியில்; விளையாடியுள்ளது. குரேசியா தனி நாடாக பிரிந்ததன் பின்னர் 5 வது தடவையாக உலக கிண்ண போட்டியில் ஆடுகின்றது. 1998 இல் அரையிறுதியில் விளையாடி இவ்வணி 3 வது இடத்தை பெற்றது. இதேவேளை 2002, 2006 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற உலக கிண்ண போட்டிகளில் முதல் சுற்றிலேயே இவ்வணி வெளியேறியமை குறிப்பிடத்தக்கது.