காணி தொடர்பான புராதன சட்டங்களை நீக்கி, மக்களுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுமென அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
காணி பிரச்சினைகளுக்காக அரசாங்க அலுவலகங்களுக்கு வரும் மக்கள் சிரமத்துக்குட்படுத்தப்படுகின்றனர். உரிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவதில்லை. பந்தை போன்று அங்குமிங்கும் மக்கள் அழைக்களிக்கப்படுகின்றனர். இறுதியில் மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்புகின்றனர். ஒரு கையெழுத்தில் முடிக்க வேண்டிய வேலைக்காக மக்கள் 30, 40 தடவை அங்குமிங்கும் அலைகின்றனர். அப்பாவி மக்களே வருகை தருகின்றனர். ஆகடீவ அதிகாரிகள் அவர்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும். காணி பிரச்சினையை ஆராய்வதற்கு நீண்ட நேரம் தேவை அதற்கு பொருமை அவசியம். ஆகவே இதுவொரு புண்ணியகாரியமாக நினைத்து அதிகாரிகள் செயல்படவேண்டும் என அமைச்சர் கயந்த மேலும் தெரிவித்தார்.
பெல்மடுல்ல கன்கந்த தேசிய பாடசாலையில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். பெல்மடுல்ல பிரதேச செயலக பகுதியில் காணி உறுதியற்ற காணி உரிமையாளர்களை இனங்கண்டு அவர்களுக்கு காணி உறுதிப்பத்திரம் தொடர்பில் தெளிவுப்படுத்தும் நிகழ்வொன்று இடம்பெற்றது. பிரதி அமைச்சர் துனேஷ் கன்கந்த உட்பட பலர் இவ்வைபவத்தில் கலந்து கொண்டனர்.