மன்னாரில் கரடி கடித்ததில் இருவர் காயமடைந்துள்ளனர். இரணை இலுப்பைக்குளம் வனப்பகுதியில் சம்பவம் பதிவாகியுள்ளது. கரடியின் தாக்குதலுக்கு இலக்கான இருவரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விலங்குகளை வேட்டையாடச்சென்ற இருவர் மீதே கரடி தாக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் 40 மற்றும் 46 வயதுடையவர்களென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இருவரும் வவுனியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.