தினமும் காபி குடிப்பது குறித்து பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. காபி குடித்தால் உடல் நலத்துக்கு நல்லது என்றும், அதிகம் குடித்தால் உடல்நலம் பாதிக்கும் என்றும் கூட கருத்துகள் நிலவுகின்றன. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் இங்கிலாந்தில் சமீபத்தில் நடத்திய ஆய்வில் அதிக அளவு காபி குடித்தால் நீண்டகாலம் உயிர் வாழலாம் என கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இவர்களிடம் 10 ஆண்டுகள் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் அதிக அளவு காபி குடித்தவர்கள் உயிரிழப்பில் இருந்து தப்பித்தனர். காபியில் உள்ள ‘காபின்’ என்ற மூலப்பொருள் ரத்த அழுத்தம் அதிகரிப்பதை தடுக்கிறது என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அதில் உள்ள ‘ஆன்டி ஆக்சிடன்ட்ஸ்’ எனப்படும் உயிர் வெளியேற்ற எதிர்ப்பிகள் ‘செல்’கள் பாதிப்பில் இருந்து காப்பாற்றுகின்றன. அதனால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டு நீண்ட நாட்கள் உயிர்வாழ முடியும் என அமெரிக்க தேசிய புற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி இன்றைய காலகட்டத்தில் அலுவலகல்களில் பணிபுரியும் ஊழியர்கள் வேலை பளு மற்றும் மன அழுத்தங்கள் காரணமாக காபி தேநீர் போன்ற பானங்களை அதிகளவில் அருந்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.