தாய்லாந்து பிரதமர் ஜெனரல் பிரயட் சான்-ஓ-ச்சா இலங்கைக்கு வருகைதரவுள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 12 ம் திகதி அவர் இலங்கை வரவுள்ளார். தாய்லாந்து பிரதமர் தனது விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அவர் இராணுவ உயர்அதிகாரிகளையும் சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.