ஜிமெயில் ஊடாக சமர்ப்பிக்கப்படும் மற்றும் கிடைக்கப்பெறும் தகவல்களை மூன்றாம் தரப்பினர் கண்காணிக்ககூடும் என்று கூகுள் நிறுவனம் உலகம் முழுவதிலுமுள்ள ஜிமெயில் பாவனையாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வோல் ஸ்ட்ரீட் ஜேர்னரிடமிருந்து (Wall Street Journal) இந்த வாரம் இது தொடர்பிலான ஒரு ஆய்வு அறிக்கை ஒன்றும் வெளிவந்துள்ளது.
கூகிள் வெளி மென்பொருள் டெவலப்பர்கள், சுற்றுலாத்திட்டம் மற்றும் விலைகள் தொடர்பான தகவல் சேவை குறித்து கூகுகிள் நிறுவனத்தின் மூலம் மூன்றாம் தரப்பினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். மது பயனாளிகளின் தரவுகளை பயன்படுத்து அபாயகரமானதாக இருப்பதாக இந்த நிறுவனம மூன்றாம் தரப்பிரனர் தொடர்பில் செயற்படும் முறை புதுமையானது என்று சர்வதேச விமர்சகர்கள் விமர்சித்துள்ளனர்.
அதேபோன்று சமர்ப்பிக்கப்படும் தகவல்களை அழித்துவிடுவதற்கு இந்த தரப்பினருக்கு சந்தர்ப்பம் இருப்பதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இந்த அனைத்து நடவடிக்கைகளும் தமது கொள்கைக்கு முரண்பட்டதல்ல என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது. எனினும் இது தொடர்பில் மேலும் உரிய நடவடிக்கையை மே ற்கொள்ள முன் வருவதாகவும் கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன