பல்வேறு தொழிற்சங்கங்கள் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ள போதிலும் நாடு முழுவதும் பாடசாலை செயற்பாடுகள் வழமை போன்று இடம்பெறுவதாக எமது பிராந்திய செய்தியாயளர்கள் தெரிவித்துள்ளனர்.இன்றைய தினம் பாடசாலைகள் நடைபெற மாட்டாது என தொழில் சங்கமொன்று போலிப்பிரசாரங்களை மேற்கொண்டுள்ள போதிலும் அதற்கு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.தற்போது நாடு முழுவதும் உள்ள பாடசாலைகள் வழமை போன்று இடம்பெறுகின்றன.எந்தவொரு பாடசாலைகளும் மூடப்படவில்லையென அதிபர்கள் மற்றும் எமது செ;யதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.