சட்டவிரோதமாக மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது. பருத்தித்துறை கடற்பரப்பில் வடக்கு கடற்படையை சேர்ந்த வீரர்கள் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர். அதன்போது சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட மீனவர்களிடமிருந்து 6 டிங்கி படகுகளை அவர்கள் கைப்பற்றியுள்ளனர். அடுத்தகட்ட விசாரணைகளுக்கென மீனவர்கள் பருத்தித்துறை மீன்பிடி விசாரணைப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.