நைஜீரியாவில் எண்ணெய் ஏற்றிச்சென்ற லொறியொன்று தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 9 பேர் பலியாகியுள்ளனர். மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. லாகோஸ் நகரில் பயணித்துக்கொண்டிருந்த குறித்த எண்ணெய் தாங்கி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்போது எண்ணெய் கசிவு ஏற்பட்டு சற்று நேரத்தில் தீப்பற்றி எரிந்துள்ளது. குறித்த தீ அருகிலிருந்த வாகனங்கள் மீதும் பரவியதையடுத்து 5 பஸ்கள், ட்ரெக்டர்கள் மற்றும் 45 கார்கள் தீக்கிரையாகியுள்ளன. எண்ணெய் தாங்கியை ஏற்றிச்சென்ற லொறியில் வேகத்தடை இயங்காமையினால் விபத்து இடம்பெற்றுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. சம்பவம் தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நைஜீரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.