உலர்ந்த பழங்களை பயன்படுத்தி இனிப்பு வகைகளை தயாரிக்கும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளது. விவசாய திணைக்களம் திட்டத்தை முன்னெடுக்கும். தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இரசாயன சுவையூட்டிகள், வர்ணம் போன்றவை உள்ளடங்கிய சிறு தீனிகள் மற்றும் இனிப்பு வகைகளுக்கு பதிலாக உலர்ந்த பழங்களை கொண்ட இனிப்பு வகைகள் சந்தைக்கு விநியோகிக்கப்படும். அவற்றிக்கு பொதுமக்கள் மத்தியில் கூடுதல் வரவேற்பு காணப்படுமென கண்ணொருவ உணவு பரிசோதனைப் பிரிவின் ஆய்வுகூட உதவி விவசாய பணிப்பாளர் தீபீக்கா ஹெட்டியாராய்ச்சி தெரிவித்துள்ளார்.