பயணிகள் போக்குவரத்து சேவையில் காணப்படும் பிரச்சினைகளை ஆராய தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் இந்த ஆய்வை ஆரம்பிக்கவுள்ளதாக வீதி பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது. பஸ், புகையிரதம், முச்சக்கர வண்டி பணிகள் சேவையினூடாக மக்களின் எதிர்ப்பார்ப்புக்கள் பூர்த்தியாகின்றதா என்பதை கண்டறிவதே இதன் நோக்கமாகும்.
தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தினூடாக குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அவர்கள் முன்வைக்கும் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாகவும் வீதி பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்தார். ஆய்வு நடவடிக்கையினூடாக பொது போக்குவரத்து சேவையில் காணப்படும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.