சீனாவின் தெற்கு பகுதியில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக 2 இலட்சத்து 20 ஆயிரத்திற்கும் கூடுதலானோருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்து வரும் பலத்த மழையை அடுத்து குன்சி பகுதி பெரிதும் பாதிக்கப்பட்டது. இப்பகுதியில் ஒருஇலட்சத்து 24 ஆயிரத்திற்கும் கூடுதலானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அறிவிக்கப்படுகின்றது. யூனான் மாநிலத்திற்கும் பலத்த மழையினர்ல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் பல வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன. பல்வேறு குழுக்கள் பாதிக்கபட்டோரை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.