சிறுவர்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்காக ‘ஜன பவுற’ என்ற பெயரில் நாடளாவிய ரீதியில் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்கு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.
அனைத்து கிராமங்களிலும் அமைக்கப்பட்டுள்ள சங்கங்கள் அல்லது அமைப்புக்கள் தொடர்பான செயற்பாட்டு பிரதிநிதிகள் குழுவொன்றை நியமித்து அவர்களுடாக அந்த கிராமங்களில் இடம்பெறும் சிறுவர்களுக்கெதிரான முறைகேடுகளை அடையாளம் காணப்படும். அத்தோடு இவற்றுக்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதே இந்த வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இந்த நிகழ்வு ஜுலை மாதம் நடத்தப்படவுள்ளது