ஆஸ்திரேலியாவின் கான்பெராவில் பெண்களுக்கான கால்பந்து போட்டி நடைபெற்று கொண்டிருந்த போது திடீரென கங்காரு ஒன்று மைதானத்துக்குள் நுழைந்து மைதானத்தை சுற்றி வந்தது. அதனை கண்ட அனைவரும் மைதானத்தை விட்டு வெளியேறினர். அதன் போது கங்காருவிடம் பந்தை எறிந்தனர். கங்காரு அந்த பந்துகளை காலால் எட்டி உதைத்தது விளையாடி அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தியது.
பின்னர் இதுகுறித்து வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது. அவர்கள் கங்காருவை வேனில் ஏற்றி அழைத்து சென்றனர். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பதிவு செய்யப்பட்டது. இதனை பலரும் பார்த்து ஆச்சரியப்பட்டனர்.
[ot-video type=”youtube” url=”https://youtu.be/e0Z9z8rHfGw”]