ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொலன்னறுவையிலுள்ள புராதன பெருமை வாய்ந்த பகுதிகளுக்கு தீடீர் விஜயம் மேற்கொண்டார்.
இன்று காலை பொலன்னறுவை புராதன பகுதிகளுக்கு விஜயம் செய்த ஜனாதிபதி அங்கு பல்வேறு பகுதிகளை பார்வையிட்டார். பொசன் நோன்மதி தினத்தை முன்னிட்டு பொலன்னறுவைக்கு வரும் மக்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வசதிகள் தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். பொலன்னறுவை புனதி பூமியில் காணப்படும் குப்பைகளை அகற்றுவது தொடர்பில் ஜனாதிபதி அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார். அப்பகுதியை சுத்தம் செய்து குப்பைகளை உரிய முறையில் அப்புறப்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவேண்டுமென ஜனாதிபதி அதிகாரிகளிடம் தெரிவித்தார். அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ஆரியரத்ன ஆகியோரும் இவ்விஜயத்தில் கலந்துகொண்டனர்.