வன பாதுகாப்பு அதிகாரிகள் சிலர் யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். கிராந்துருகோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விரானகம பகுதியில் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தாக்குதலில் படுகாயங்களுக்குள்ளான அதிகாரியொருவர் கிராந்துருகோட்டை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார். மரண பரிசோதனைகள் இன்று இடம்பெறவுள்ளன.