பந்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டுக்காக இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு ஒரு போட்டித்தடை மற்றும் போட்டி கட்டணத்தில் 100 வீதத்தை செலுத்த வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது. சர்வதேச கிரிக்கெட் சபை இதனை அறிவித்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.