புதிதாக இரண்டாயிரம் பஸ்களை சேவையில் ஈடுபடுத்த அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. இதற்கென வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடவுள்ளதாக பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். மக்களின் போக்குவரத்து வசதிகளை இலகுபடுத்துவதே இதன் நோக்கமாகும். அரசின் நிதி வளத்தை பயன்படுத்தாது இதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதற்கு தீர்மானித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். திட்டத்தின் முதற்கட்டமாக இரண்டாயிரம் பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதுடன், பயன்பாட்டிலுள்ள பஸ் வண்டிகளில் 500 பஸ்களை வருடந்தோறும் போக்குவரத்து சேவையிலிருந்து நீக்குவதற்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார்.
போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் சுமார் 600க்கும் அதிகமான பஸ்கள் மிகவும் பழைமையானவையென தெரியவந்துள்ளது. இந்நிலையில் பஸ் போக்குவரத்து சேவையை செயற்திறன் மிக்கதாக முன்னெடுக்கும் வகையில் புதிய பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட வேண்டியது அவசியமென அமைச்சரவையில் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பிரதியமைச்சர் அசோக் அபேசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.